பிரபல வில்லன் நடிகரின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் பல முன்னணி வில்லன் நடிகர்கள் அறிமுகமாகி ஒரு ரவுண்டு வந்து பின்னர் காமெடியில் குதித்து நடித்து வருகின்றனர். ஆனால் நடிகர் பொன்னம்பலம் அப்போதே காமெடியிலும் வில்லத்தனமான நடிப்பிலும் கலக்கினார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர். இந்த வில்லன் நடிகர் 1963ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.சிறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் , லாங் ஜம்ப் மற்றும் ஹை ஜம்ப் ஆகியவற்றில் கை தேர்ந்து விளங்கியவர். மேலும், 1984ஆம் ஆண்டு தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் பொன்னம்பலம்.

இவர் எப்படி சினிமா உலகத்திற்கு வந்தார் என்று சொன்னால் ஆச்சர்ய படுவீருகள். பொன்னம்பலத்திற்கு மொத்தம் 6 அக்கா தங்கைகள். இவர்கள் தான் பொன்னம்பலத்தை சினிமாவில் நடிக்க உதவினார்.

அவரது அக்கா தங்கைகள் இல்லை என்றால் இவர் சினிமா உலகிற்கே இவர் வந்திருக்க மாட்டார். இவர் 1983 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேலும் 1993இல் வந்த வால்ட்டர் வெற்றிவேல் இவருக்கு பெரிதும் உதவிய படமாகும்.


இந்த படத்தில் இவர் நடித்த ‘கபாலி’ கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னர் தான் தமிழ் திரையுலகில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் வலம் வந்தார். அபூர்வ சகோதரர்கள், கூலி, இந்தியன், சிம்மராசி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

பின்னர் தனது நடிப்பு ஒரே மாறி போனதையும் இதனை மக்கள் விரும்பாததையும் கண்டுகொண்ட அவர் சில படங்களில் முழு நேர காமெடி நடிகனாகவும் அறிமுகமானார் . கடைசியாக பறந்து செல்லவா என்ற படத்தில் நடித்தவர், விழுப்புரத்தில் மைக்கேல் என்பவரிடம் தன் அறக்கட்டளைக்கு ஓர் கார் எடுத்து இரண்டு மாத வாடகை மட்டும் கொடுத்துவிட்டு பின்னர் கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும் இவர் இப்பொழுது ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுகவை சேர்ந்தவர். தற்போது, ஆமா நான் போக்கிரி தான் என்ற ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் பழைய வில்லன் நடிகர் பொன்னம்பலத்தை பார்க்கமுடியாது வித்யாசமான கதாபாத்திரத்தில் இவரை பார்க்கலாம் என படக்குழு கூறியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி