மீண்டும் சினிமாவில் ரி-என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி..!! எதற்காக தெரியுமா..?


இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.நம்ம தமிழ் சினிமாவில் அஜித்,விஜய் , விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தேவயானி.

நடிகை தேவயானியும் இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை.


தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்பு படத்தில் நடிக்க வில்லை என்றாலும் விளம்பரத்தில் நடித்து வந்தார் இப்படி இருக்க இவர் மீண்டும் திரையுலகில் ரி-என்ட்ரி கொடுக்க உள்ளார் உரு படத்தின் தயாரிப்பாளர் v.p விஜி எழுமின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் 5 ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை படமாக்க உள்ளார்கள் இந்த படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக தேவயானி நடிக்கிறார் இவர்கள் இருவரும் இந்த 5 குழந்தைகளுக்கு எப்படி உதவுகிறார் என்பது தான் கதை என கூறுகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி