பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலமையா..? எதனால் தெரியுமா..?


எங்க ஊர் பாட்டுகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாந்திபிரியா என்ற நிஷாந்தி.

தமிழில் இதுவே இவருக்கு முதல் படம் ஆகும். இப்படத்தின் செண்பகமே தென் பொதிகை சந்தனமே பாடலின் மூலம் 1987-ல் பிரபலமானார்.

இவர் பிரபல நடிகை பானுபிரியாவின் தங்கை ஆவார். தமிழில் சில படங்களில் நடித்த இவர் பாலிவுட் சினிமா பட அதிபர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

பிறகு படங்களில் நடிப்பதை கைவிட்டார். இவருக்கு வந்த பெரும் சோதனை இவரின் கணவர் இறந்தது தான்.


2004 ஆம் ஆண்டு இவரது கணவர் மாரடைப்பால் காலமானார். தற்போது இரு மகன்களுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

மேலும் தனது கணவரின் நிறுவனமான ராஜ் கமல் ஸ்டூடியோவை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி எதுவாகயிருந்தாலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!