ஸ்ரீதேவியின் பூதவுடலைச் சுமப்பதற்கு உயிர்ப்பூக்களைக் கொண்ட ஊர்தி தயாராகுகின்றது..!!


மறைந்த இந்தியப் பெரும் நடிகை ஸ்ரீதேவியின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இல்லத்தைத் தேடி இந்திய சினிமாவின் உயர்ந்த நட்சத்திரங்கள் பலரும் இப்பொழுதுவரை சென்றவண்ணமுள்ளனர். ஸ்ரீதேவியின் பூதவுடலுக்கு பிரபலங்களும் பொதுமக்களும் தமது அஞ்சலியினைச் செலுத்தியவண்ணமுள்ளனர்.


இதனிடையே ஸ்ரீதேவியின் பூதவுடலைக் காவிச் செல்வதற்கான விசேட ஊர்தியொன்று அலங்கரிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரமாண்டமான முறையில் வெள்ளை நிற உயிர்ப் பூக்களைக் கொண்ட மாலைகளைக் கொண்டதாக இந்த ஊர்தி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்கான பாண்ட் வாத்தியக் குழு ஒன்று தயார் நிலையில் உள்ளதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.


மஹாராஸ்டிர மாநில பொலிஸாரின் பாண்ட் வாத்தியக் குழுவே ஸ்ரீதேவியின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி