ஸ்ரீதேவியின் உடலை விமானம் மூலம் இந்தியா கொண்டு வர எவ்வளவு வாடகை தெரியுமா..?


நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வருவதற்காக டுபாயில் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி டுபாய்க்கு அனுப்பிவைத்தார்.

இந்த தனி விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் நேற்று மாலை நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு துபாய் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

நேற்று மாலை வரை 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி