ஸ்ரீதேவியின் முகத்தை பார்க்க முடியாத ரசிகர்களுக்காக அவரது புகைப்படம்..!! கடைசியா ஒரு தடவை பார்த்துக்கோங்க..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார் அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் செய்திகள் வெளியிட்டார். ஸ்ரீ தேவி அவர்களது உடல் பிரேத சோதனைக்கு பிறகு, அவர் இறந்ததற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

குளியலறையில் உள்ள டப்பின் நீரில் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியானது.


நேற்று முன் தினம் காலை அவரது உடல் இந்தியா வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தாமதமாகி நேற்று இரவு இந்தியா வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்படுகிறது. பின்னர், இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வில்லிபார்லியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஸ்ரீதேவியின் முகத்தை புகைப்படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி