தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வடிவேலு.
செந்தில்-கவுண்டமனி காமெடி நடிகர்களுக்கு அடுத்து மக்கள் அதிகம் ரசித்தவர் வடிவேலு என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக பல விஷயங்களுக்காக டிசைன் செய்யப்படும் மீம்ஸ்களில் பார்க்கலாம்.
தற்போது இவர் ஒரு மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
அதாவது வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசியில் நடிப்பதாக இருத்து பின் நிறைய பிரச்சனைகளால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனால் அப்பட தயாரிப்பாளர் வடிவேலு குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது நடிகர் சங்கம், ஒன்று அந்த படத்தை நடித்து கொடுக்க வேண்டும் அல்லது தயாரிப்பாளர் நஷ்டத்தை ஏற்க வேண்டும் என்று வடிவேலுவிடம் கூறியுள்ளனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி