ஸ்ரீதேவி இறக்கும் முன் நடந்த சம்பவம் இதுதானாம்..? சனிக்கிழமை பரபரப்பு தகவல்..!!


நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் துபாயில் காலமானார் என்ற செய்திகேட்டு பலரும் உறைந்து போனார்கள். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்தார், வழுக்கி விழுந்து இறந்தார் என தகவல்கள் வெளியானது.ஆனால் உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது. துபாயில் நடந்த திருமண விழாவுக்கு சென்றவர் எமிரேட்ஸில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது அவரது கணவர் போனி கபூர் இந்தியாவிலிருந்து அவருக்கு இன்பதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டு துபாய் சென்றுள்ளார்.


சனிக்கிழமை இரவில் ரகசியமாக ஒரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாராம். மாலை நேரத்தில் விசயத்தை முழுமையாக சொல்லாமல் கிளம்பு போகலாம் என கூறியுள்ளாராம்.ஸ்ரீதேவியும் குளித்துவிட்டு வருகிறேன் என பாத்ரூமிற்கு சென்றவர் தானாம். வெகு நேரமாகியும் உள்ளே போன வர் வெளியே வராததால் போனி கபூர் சத்தம் கொடுத்துள்ளார்.


எந்த பதிலும் ஸ்ரீதேவியிடமிருந்த வராததால் சந்தேகமான கபூர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். உள்ளே பார்த்தால் பாத் டப் தொட்டியில் மிதந்து கிடந்துள்ளாராம் ஸ்ரீதேவி.இதனால் கபூர் தன் நண்பர் உதவியுடன் ஸ்ரீதேவியை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றிருக்கிறார். அங்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி