அமலா பாலுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா..? இனி இவர் காட்டில் அடைமழைதான்..!!


இயக்குனர் பிளஸியின் அடுத்த படமான ஆடுஜீவிதத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா பால். பிளஸி படத்தில் நடிக்க பல நடிகைகள் விரும்பிய நிலையில் அமலா பாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் இது.

ஆடுஜீவிதம் படத்தில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். முன்னதாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஒரு படத்திற்காக ப்ரிதிவிராஜிடம் 2 ஆண்டு கால்ஷீட் இல்லை என்று கூறப்பட்டது.

படம் பற்றி ஏதேதோ கூறப்பட்ட நிலையில் ஆடுஜீவிதம் அமர்க்களமாக துவங்க உள்ளது. விருது பெற்ற இயக்குனரின் படத்தில் நடிப்பதை நினைத்து அமலா பால் மகிழ்ச்சியில் உள்ளார்.

தேசிய விருது பெற்ற பிளஸியின் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.


பென்யமினின் கிளாசிக் நாவலை அப்படியே 3டியில் படமாக்குகிறார்கள். இந்த படத்திற்காக ப்ரித்விராஜ் 2 ஆண்டுகள் ஒதுக்கியுள்ளார் என்கிறார் அமலா.

ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 ஆண்டுகள் கழித்து அவர் மலையாள படத்திற்கு இசையமைக்கிறார். ஆஸ்கர் விருது வாங்கிய ரசூல் பூக்குட்டி படத்தின் சவுண்டு என்ஜினியராக பணிபுரிகிறார்.

ஆடுஜீவிதம் படத்திற்காக பிளஸியுடன் பணியாற்றுகிறேன். படத்தின் கதை மிகவும் அழகானது என்று ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். மாஸ்டர்கள் ஒன்றுகூடும் இந்த படம் திரையிலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமலா பால் நம்புகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!