மறுபடியுமா.! கவின் அமைதியா இருந்தாலும் லாஸ்லியா விடாது போல.!

கவினை முழுமையாக மறக்க முடியாமல் பெரும் குழப்பத்தில் மூழ்கிய லாஸியாபிக்பாஸ் வீட்டில் ஷாக்சியுடன் கவீன் மிகவும் நெருங்கிய பழகிய விஷயம், லாஸ்லியாவுக்கு பின்னரே தெரியவந்ததால், அவர் கவீனை உண்டு, இல்லை என்று கேள்வியால் கதறவிட்டார்.

அதுமட்டுமின்றி கவீன் நடிப்பதாகவும், கூறி அவரிடமிருந்து பேசுவதையே விட்டார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின்னர் ஷாக்சி பிரச்சனையால் பிரிந்தது

இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியான ப்ரோமோவில், கவினிடம் சாரி கேட்டார் லாஸ்லியா.

அதற்கு கவின் ஏன் என்னிடம் சாரி கேட்கிறாய் என கேட்க, நான் அன்று உன்னிடம் கூறிய வார்த்தை தவறு, நீ என்னிடம் நடிக்கவில்லை.

எனக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் என்னை நீ பார்த்து கொண்டாய், என்னை மன்னித்து விடு என கூறினார்.

அதற்கு கவினும் சிரித்து கொண்டே சரி என கூற இருவரும் ஒருவர் கையை ஒருவர் கை மீது தட்டி கொண்டு நட்பாகினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.