சூர்யாவின் குழந்தைகள் மேடையில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, ஜோதிகாவின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோருக்கும் நடிப்பில் ஆர்வம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
பாடகி ஷாலினி நடத்திய குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் தேவ் வாளேந்தி சண்டை போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தியா மேடையில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சிங்கத்திற்கு பிறந்தது சிங்கம் தான் என்று கூறி சூர்யா ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.தியா தனது தாய் ஜோதிகா போன்றே எக்ஸ்பிரஷனில் அசத்துகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.
சிங்கக் குட்டி தேவ் மேடையில் வாள் ஏந்தி சண்டை போடும் காட்சி.
செல்லங்கள் தேவ், தியா மேடையில் பெர்ஃபாம் செய்ததை பார்த்த சூர்யா ரசிகர்களால் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ட்விட்டர் தேவ், தியா ஆகியோரின் புகைப்படங்கள், வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். அடுத்த தலைமுறை ரெடியாகிவிட்டது என்கிறார்கள்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!