தன் கணவரின் முதல் காதலியை பற்றி கூறிய நடிகை காஜல் அகர்வால்.. ரொமான்டிக் பேட்டி இதோ

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி, தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் கொண்டார் . சமீபத்தில் இந்த ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது.

இந்நிலையில் தனது கணவர் குறித்து முதன் முறையாக வெளியப்படையாக பேசியுள்ளார் நடிகை காஜல் அகர்வால் :

” என்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறார் கவுதம். அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும்.

அதனால் அவர் ப்ரொபோஸ் செய்தபோது ஆச்சரியமாக இல்லை. என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.

எங்கள் இருவரில் கவுதம் தான் ரொமான்டிக். கவுதமுக்கு அவரின் செல்போன் மீது காதல். தற்போது புது போன் வேறு கிடைத்திருக்கிறது. அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும்.

எங்களுக்கு இடையே சண்டை வந்தால் கவுதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார். திருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடியேறியது வித்தியாசமான அனுபவம்.

கவுதம் என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா, தூங்கினாரா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நான் எங்காவது சென்றால் பத்திரமாக சென்றேனா, என் நாள் நல்லபடியாக இருந்ததா என்று கவுதம் கேட்பார். திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை. ” என்று நைடகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!