கங்கனாவின் படத்திற்கு கடும் எதிர்ப்பு போராட்டம்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தீபிகா படுகோனே நடிப்பில் சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘பத்மாவத்’ படத்துக்கு கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு, பஸ்கள் எரிப்பு, கல்வீச்சு என்று வன்முறை சம்பவங்களும் நடந்தன.

ராணி பத்மினியாக நடித்த தீபிகா படுகோனே தலைக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தது.

தற்போது பத்மாவத் படத்தைப்போல் கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘மணிகர்னிகா’ என்ற படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. விடுதலைப் போரில் அவருக்கிருந்த பங்களிப்பையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் வாள் சண்டை பயிற்சிகள் எடுத்து கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.


முகலாய மன்னருக்கு எதிராக பானிபட் போரில் 3 முறை போரிட்ட மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளார். பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மணிகர்னிகா படத்தில் வீரமங்கை ராணி லட்சுமிபாயின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த இங்கிலாந்து ஏஜெண்டுக்கும் காதல் ஏற்படுவதுபோல் காட்சி வைத்து இருப்பதாகவும் சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் பத்மாவத் படத்துக்கு நேர்ந்த கதிதான் மணிகர்னிகா படத்துக்கும் ஏற்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. எதிர்ப்பு காரணமாக கங்கனா ரணாவத் அதிர்ச்சியில் இருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி