இவருக்கு இப்படியொரு தாராள மனசா..? அப்படி என்ன செய்தார் தெரியுமா..?


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று நடிகை கவுதமி கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகிலேயே மிகவும் கொடிய உயிர்க்கொல்லி நோய் புற்றுநோய். அதனை பரவவிடாமல் தடுக்கும் வகையில் இன்று உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது.

நடிகை கவுதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஆண்டுதோறும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.


சென்னை பெசன்ட்நகரில் அவரது அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபயணத்தில் 1,000 பேர் பங்கேற்றனர்.

இதில் நடிகை தேவயானியும் கலந்து கொண்டார். ஆரம்பகட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டால் அதில் இருந்து மீள முடியும் என்று கவுதமி கூறியுள்ளார். இளைஞர்கள் தாமாக முன்வந்து

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் கவுதமி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடவேண்டியவை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி