பிரபல இளம் நடிகை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!! வெளியானது அதிர்ச்சி தகவல்..!!


பிரபலங்களுக்கு ரசிகர்கள் பல எண்ணிக்கையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தீவிர ரசிகர்களுக்கிடையே சில மூர்க்கத்தனமான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிலரால் அவர்களுக்கே விபரீதம் நிகழ்ந்துவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் பாகிஸ்தானில் ஒரு பாடகிக்கு நடந்துள்ளது. சம்பவத்தில் பலியானவர் சும்புல் கான். இந்த இளம் நடிகைக்கு வயது 25.

இவர் டிவி நிகழ்ச்சிகளில் பாடியும் வருகிறார். அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் தங்கள் பார்ட்டியில் பாடச்சொல்லி வற்புறுத்தியுள்ளது.

பலமுறை அவர்கள் சொல்லியும் சும்புல் சம்மதம் தெரிவிக்காததால் அந்த கும்பல் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்று தப்பியுள்ளது.

அந்த மூவரை பிடிக்க போலிஸ் விரைந்துள்ள நிலையில் நயீம் கட்டாக் என்ற குற்றவாளி பிடிப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி என்பது அதிர்ச்சியான தகவலாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி