பிக்பாஸ் பிரபலங்களால் இப்படியொரு அவமானமா..? கவலையில் புலம்பும் நடிகர் வையாபுரி..!!


நிறைய பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்து சினிமாவில் ஜெயிப்பார்கள். அப்படி கலைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பாக அமைந்த மேடை பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் இப்போது சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகின்றனர்.

இதில் வையாபுரியும் இப்போது சுந்தர்.சியின் கலகலப்பு 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பற்றி ஒரு பேட்டியில் வையாபுரி பேசும்போது பிக்பாஸ் பற்றியும் பேசியிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் அண்ணே நீங்கள் இந்த இடத்துக்கு எல்லாம் போனது இல்லையா, வெளியே போனதும் ஒரு குடும்பமாக நாம் ஊர் சுற்றுவோம் என கூறினர். ஆனால் இப்போது வரை அதை யாரும் செய்யவில்லை, நான் அழைத்தாலும் யாரும் என் போனை எடுப்பது இல்லை என மிக வருத்தத்துடன் பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி