என்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் விபரங்களை அம்பலப்படுத்துவேன்..!! நடிகை பார்வதி அதிரடி..!!


நடிகை பார்வதி, கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் வெளியான அவுட் ஆப் சிலபஸ் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன் பின்பு மரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பூ திரைப்படத்துக்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அதோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார் பார்வதி. ஒரு படத்தில், பெண் போலீஸ் அதிகாரியிடம் நடிகர் மம்முட்டி பேசும் வசனத்தை பார்வதி கண்டித்துக் கூற, மம்முட்டியின் ரசிகர்கள் அவரை சமூ கவலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்தனர். இந்த விவகாரம் தற்போது முடிவடைந்து விட்டது

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


அந்த குழுவில் நடிகர் பார்வதியும் உள்ளார். இந்த நிலையில் சமீபபத்தில் நடிகை பார்வதி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில்

நான் பிரச்சினையை சந்தித்தபோது, அதைக் கண்டும் காணாமல் போகச் சொன்னார்கள். இதுபோல நிறைய பார்த்திருக்கிறேன். கடந்த சென்று விடு என மம்முட்டி கூறினார். மம்முட்டி இந்த விஷயத்தைப் பற்றி என்ன சொன்னார் என்று நான் முழுமையாக திருப்தி அடைகிறேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் நான் இந்த விஷயத்தில் அவர் பேசியத்தற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் முகத்திரையைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம்.

எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுவேன், அந்த வேலையை விரைவில் தொடங்குவேன் என கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி