இனிமேல் இப்படிதான் நடிப்பேன்..!! நடிகையின் முடிவால் அசந்துபோன இயக்குனர்..!!


நடிகை ஸ்ரேயா 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், விஷால், தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகி என்று பெயர் எடுத்துள்ளார். தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். சினிமாவில் நீடிப்பது குறித்து ஸ்ரேயா கூறியதாவது:-

“நான் சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனை ஆண்டுகள்தான் நடித்துக்கொண்டே இருப்பீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். ஹாலிவுட் நடிகை மெரில் 60 வயதை தாண்டிய பிறகும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரைப்போல் நானும் சினிமாவில் நீடித்து இருப்பேன்.


தற்போது தமிழில் நரகாசுரன், தெலுங்கில் காயத்ரி, வீர போக வசந்த ராயலு, இந்தியில் தட்கா என்று மூன்று மொழி படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் கதக் நடன கலைஞர். சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டு இருந்ததால் 10 ஆண்டுகளாக நடன பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. தற்போது மீண்டும் நடன பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறேன்.

நடனம் என்பது தியானம் மாதிரி. இந்த தலைமுறையினரும் நமது பாரம்பரிய நடனங்களான பரத நாட்டியம், குச்சுபுடி, கதக் உள்ளிட்ட நடனங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அவற்றை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அதற்கான முயற்சியில்தான் இப்போது நான் ஈடுபட்டு இருக்கிறேன்.”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி