அனுஷ்காவிற்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் செய்த கேவலம்..!! அழுது புலம்பும் மனைவி..!!


நடிகை அனுஷ்கா ஜோடியாக ‘பஞ்சாக்சரி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர் சாம்ராட் ரெட்டி. மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ‘கிட்டு உன்னடு ஜக்ரத்தா’ என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவருக்கும், ஹர்ஷிதா ரெட்டி என்பவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில், தெலுங்கு நடிகர்-நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் இவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டு பிரிந்து தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், சாம்ராட் ரெட்டி மீது ஹர்ஷிதா ஐதராபாத்தில் உள்ள மாதபூர் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-


“சாம்ராட் ரெட்டியும், நானும் திருமணம் செய்து குடித்தனம் நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு சில நாட்களில் எங்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டது. சாம்ராட் என்னை அடித்து துன்புறுத்தினார். கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படியும் கொடுமைப்படுத்தினார். இதனால் நாங்கள் பிரிந்தோம். சில நாட்களுக்கு முன்பு நான் பிறந்த ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது சாம்ராட் எனது வீட்டுக்குள் புகுந்து என்னுடையை நகைகளையும், பணத்தையும் திருடிச்சென்று விட்டார். அங்கிருந்த கேமராக்களையும் உடைத்து விட்டார்.”

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்ராட் ரெட்டியை கைது செய்தனர். நகைகளையும் போலீசார் மீட்டனர். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி