தீனாவுக்கு பிறகு அறந்தாங்கி நிஷாவா..? ஒல்லி நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் நடிகர் தனுஷ்.

இருவரும் பிரிந்து விட்டனர். சிவகார்த்திகேயன் வளர்த்து விட்ட ஏணியை மறக்க மாட்டேன் என்று கூறி வருகிறார்.

ஆனால் தனுசோ சிவகார்த்திகேயன் குறித்து பொது இடத்தில் வாய் திறப்பதில்லை. தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனாவை கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார்.


இது சிவகார்த்திகேயனுக்கு போட்டி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே கலக்கப்போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷாவுடன் தனுஷ் எடுத்து கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தனுஷின் ரசிகர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சார் முதலில் தீனா, இப்போது அறந்தாங்கி நிஷாவா என்று கமென்ட்டுகளை தெறிக்க விட்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி