போதைக்கு அடிமையானதால் அநாதையாக இறந்த நடிகர்..!! நடுத்தெருவில் கைவிடப்பட்ட பரிதாபம்..!!!


பிரபலங்கள் மிகவும் எளிதாக போதை பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இப்போது தான் அப்படி என்று பார்த்தால் 60, 70வதுகளிலும் பிரபலங்கள் குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிலும் சந்திரபாபு, நாகேஷ், அசோகன், கண்ணதாசன் என பல பேர் இதனால் தான் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவர்களின் வரிசையில் சுருளிராஜனும் இடம் பெறுவார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இவர் நாடக நடிகரானார். சுருளிராஜன், நகைச்சுவையில் இரண்டு அர்த்தமுள்ள வசனங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசி நடித்த முதல் நகைச்சுவை நடிகர் தான்.


தமிழ்நாடே கொண்டாடிய சுருளிக்கு வீட்டில் நல்ல பெயர் இல்லை. குடிப்பழக்கமே இதற்கு காரணம், படங்கள் நடிக்கும் போதும் குடித்துக் கொண்டே இருந்தார்.

கல்லீரல், மண்ணீரல் இரண்டும் பாதிக்கப்பட்டது. படங்கள் எல்லாம் பாதியில் நின்றது, சம்பள பாக்கியும் பல லட்சங்கள் இருந்தது.

மருத்துவமனைக்கு கூட பணம் இல்லை. கடைசியில் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு இறந்து போனார் சுருளிராஜன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி