தமிழில் இந்தியன், சின்ன கவுண்டர் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுகன்யா.
சினிமாவில் நடித்து கொண்டிருந்த சுகன்யா திடீரென சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் இவருக்கு சென்னை பெசண்ட் நகரில் வீடு ஒன்று உள்ளது.
அந்த வீட்டை சுகன்யா பிரபல அரசியல் கட்சியை சார்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
பின்னர் அவர் ஒரு சில நாட்கல் கழித்து அந்த வீட்டை தனது கட்சி அலுவலகமாக மாற்ற முயற்சித்துள்ளார்.
ஆனால் நடிகை சுகன்யா அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் பிடிவாதமாக வீட்டை காலி செய்யாமல் இருந்ததால் நடிகை சுகன்யா அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் அந்த நபர் தனது கட்சி தரப்பிலிருந்து சுகன்யாவுக்கு சமாதானம் செய்து கொள்ளலாம் என தூது விட்டுள்ளார்.
மேலும் நிலுவையில் உள்ள வாடகையை கேட்காதீர்கள் என கூறியுள்ளனர். இதனால் நடிகை சுகன்யா மிகுந்த மன கஷ்டத்தில் இருப்பதாக தெரிகிறது.
இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி