திருமணத்திற்கு பிறகு பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? என்ன செய்கின்றார் தெரியுமா..?


நடிகை குஷ்பு கடந்த 1980ல் குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் 1989ம் ஆண்டு வருஷம் 16 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் 1990களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு ரசிகர்கள் கோவில் கூட கட்டிய வரலாறு உண்டு.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருந்த இவர் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து மணந்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார். அதோடு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்ததோடு, சீரியல்களையும் தயாரித்து வருகிறார்.

தற்போது முழு நீள அரசியல்வாதியாக மாறி உள்ள இவருக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். குடும்பம், குழந்தைகள், அரசியல், சினிமா என இப்போதும் குஷ்பு முன்புபோலவே பிசியாக உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி