நித்யானந்தாவுடன் ரகசிய தொடர்பில் இருந்த நடிகை கவுசல்யா..!! என்ன ஆனார் தெரியுமா..?


காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கவுசல்யா. கடந்த 1979ம் ஆண்டு பிறந்த இவரின் சொந்த பெயர் நந்தினி.

தொடர்ந்து சொல்லாமலே, நேருக்கு நேர், பூ வேலி போன்ற 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ், கன்னட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தீராத முதுகு வலி பிரச்னை இருந்துள்ளது. இந்த முதுகு வலி காரணமாகவே பல பட வாய்ப்புகளை கூட இழந்துள்ளார்.


இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்று சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதில் அவரது முதுகு வலியும் குணமாகி உள்ளது. இதனால் நித்யானந்தாவின் மீது ஈர்க்கப்பட்ட கவுசல்யா அங்கேயே சில நாட்கள் தங்கி சேவை செய்து வந்துள்ளார்.

சமீபத்தில் சேலத்தில் நடந்த திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

37 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி