போதைக்கு அடிமையாகி.. சொத்துக்களை இழந்து பரிதாபமாக இறந்து போன நடிகை..!!


அந்த காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இணையாக மதிக்கப்பட்டவர், செல்வ செழிப்போடு திகழ்ந்தவர் நடிகை சாவித்திரி.

இவர் சென்னை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பல்வேறு இடங்களில் மாட, மாளிகைகளை வாங்கி போட்டவர். சொந்தமாக ஸ்டுடியோவும் வைத்திருந்தார்.

ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தை பிறந்து உடன் கருத்துவேறுபாடு காரணமாக ஜெமினி கணேசனை பிரிந்தார். கணவன் பேச்சை மீறி படம் எடுத்து சொத்துகளை இழந்தார்.


தனக்கு சொந்தமாக இருந்த மாட மாளிகை மற்றும் ஸ்டுடியோக்களை விற்றார். கடைசியில் சிறிய வாடகை வீட்டில் குடியேறினார். குடிபோதைக்கு அடிமையாகி இருந்த சொத்துகள் அனைத்தையும் இழந்தார்.

இனிமேல் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளானார். குடிக்க பணமின்றி கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இறுதியில் ஒருநாள் குடிபோதையில் சுயநினைவின்றி ரோட்டோரம் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது.

எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயிருந்தார். இவரை உறவினர்கள் மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். கோமாவில் இருந்த நடிகை சாவித்திரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB