பிரபல தொகுப்பாளினியின் கணவர் மீது மோசடி புகார்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


கடந்த 10 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா.

இவர் நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகென தனி ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு.

சமீபத்தில் அஞ்சனா தான் தொகுப்பாளினி வேலையை நிறுத்தி விட்டதாக கூறி ரசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இவரது கணவர் கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் ஆகிய இருவரும் நாங்கள் திட்டம் போட்டு திருடற கூட்டம் என்ற படம் தயாரிக்கிறோம் என கூறினர்.

மேலும் அதில் நீங்களும் பங்கு பெற வேண்டும் என என்னிடம் கூறினார்கள். நானும் அதை நம்பி அவர்களுக்கு ரூ. 5 கோடி பணம் கொடுத்தேன்.

ஆனால் படம் ரிலீஸாகும் நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து என்னை நீக்கி விட்டனர்.

மேலும் கடந்த ஒரு வருடமாக தான் கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.

எனவே அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு எனது பணத்தை பெற்று தருமாறு தயாரிப்பாளர் பிரபு புகாரில் கூறியுள்ளார்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB