விஜய் அல்லது சூர்யாவை வைத்து இயக்கவிருந்த மறைந்த இயக்குனர், பிரபல நடிகை கூறிய தகவல்..

பிரபல பாலிவுட் இயக்குனரான நிஷிகாந்த் காமத் உடல்நல குறைவால் சமீபத்தில் காலமானார். இதுகுறித்த செய்தியும் நாம் பார்த்திருந்தோம்.

மேலும் இவர் நடிகர் மாதவனை வைத்து தமிழில் எவனோ ஒருவன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அப்படத்தில் நடித்த பிரபல நடிகை சங்கீதா இயக்குனர் நிஷிகாந்த் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் நிஷிகாந்த் லால் பஹாரி என்ற மராத்திய திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருந்தாராம்.

அப்படத்தில் நடிகர் விஜய் அல்லது சூர்யாவை நடிக்க வைக்க நினைத்துள்ளார் என நடிகை சங்கீதா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் நிஷிகாந்த் சூர்யாவின் காக்க காக்க திரைப்படத்தை ஹிந்தியில் போர்ஸ் என ரீமேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!