வீரத்தேவன் – சினிமா விமர்சனம்


நாயகன் கௌஷிக் கிராமத்தில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் மாமாவுடன் ஜாலியாக ஊர் சிற்றி வருகிறார். அதே ஊரில் இருக்கும் நாயகி மீனலோட்சனியை 3 வருடமாக ஒருதலையாக காதலித்து வருகிறார் கௌஷிக். இவரின் காதலுக்கு மாமாவான வீரன் செல்வராசு உதவி செய்கிறார்.

ஒருகட்டத்தில் கௌஷிக்கின் காதலை ஏற்றுக் கொண்ட மீனலோட்சனி, இருவரும் காதலித்து வருகிறார்கள். மீனலோட்சனிக்கு 5 அண்ணன்கள். இதில் பெரிய அண்ணன் மிகவும் தைரியசாலி, நியாயமானவன். நியாயத்திற்காக வெட்டு, குத்து என சண்டைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மீனலோட்சனியை பெண் கேட்டு செல்கிறார். ஆனால், அவருடைய அண்ணன், பெண் தர மறுத்துவிடுகிறார். இதனால், கௌஷிக்கும், மீனலோட்சனியும் அண்ணனுக்கு தெரியாமல் மாமா மூலமாக திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இந்த விஷயம் அண்ணன்களுக்கு தெரிந்து, கோபமடைந்து பின்னர் சமாதானமாகி விடுகிறார்கள்.

கௌஷிக்கும், மீனலோட்சனியும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மாமாவான வீரன் செல்வராசு கௌஷிக்கை கொலை செய்து விடுகிறார்.


இறுதியில் மாமா வீரன்செல்வராசு எதற்காக கௌஷிக்கை கொலை செய்தார்? இதன் பின்னணி என்ன? மீனலோட்சனி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கௌஷிக், துறுதுறுவென நடித்திருக்கிறார். பல காட்சிகள் இல்லை என்றாலும், காதல் காட்சிகள், நடன காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனலோட்சனியும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாமாவாக வரும் வீரன்செல்வராசு, மீனலோட்சனியின் அண்ணன்கள் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒரு சமுகத்தை சார்ந்த படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வீரன் செல்வராசு. முதல் பாதி சோகமாக சென்றாலும், அதன்பின் சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார். திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டாலும் பெரியதாக தெரியவில்லை. கொலை செய்ததற்கு காரணம் சிறியதாக இருந்தாலும், சொன்ன விதத்தை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள முடிகிறது.

தர்மபிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. மகேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வீரத்தேவன்’ வீரமானவன்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB