கணவரை பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் நடிகை பானுப்பிரியா…!! என்ன ஆனார் தெரியுமா..?


கண்ணழகி பானுப்பிரியாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி என்றாலும் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான்.

இவர் தமிழ், தெலுங்கு என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு சாந்தி பிரியா என்ற தங்கையும், கோபால கிருஷ்ணன் என்ற அண்ணனும் உள்ளார்.

இதில் சாந்தி பிரியா எங்க ஊரு பாட்டுக்காரன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பானுப்பிரியா கடந்த 1998ம் ஆண்டு ஆதர்ஷ் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


பின்னர் கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடந்த 2003ல் ஒரு மகள் பிறந்தார்.

பின்னர் 2005ல் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

பின்னர் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வந்தார். மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

தனது மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி