சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற அல்லு அர்ஜூனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய மந்திரி அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார். இதில் ‘புஷ்பா ‘ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.. மேலும் இதில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய விருது வென்ற அல்லுஅர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத்-க்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , மனமார்ந்த வாழ்த்துக்கள் அல்லுஅர்ஜுன். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றதால் தெலுங்கு திரைப்படத் துறையில் சரித்திரம் படைத்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி தேவிஸ்ரீ பிரசாத். இது ஒரு தகுதியான அங்கீகாரம் என தெரிவித்துள்ளார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!