ஜெயிலர் வெற்றி.. நெல்சனுக்கு உடனே கால் செய்த விஜய்.. எதற்கு தெரியுமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

‘ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக அளவில் ரூ.90 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் கூறுமாறு விஜய் சொன்னதாக நெல்சன் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!