என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று.. இயக்குனர் செல்வராகவன் பதிவு

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஃபர்ஹானா’ படத்தை பற்றி என்ன சொல்வது. என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகுப்படுத்தியுள்ளார். இது போன்ற காவிய படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை. தயாரிப்பாளர் பிரபு சாருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!