ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சமந்தா

மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கிய நடிகை சமந்தா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல்நலம் தேறி மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இந்தியில் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கிறார். அதோடு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படப்பிடிப்புகளிலும் மாறி மாறி பங்கேற்று வருகிறார். சமந்தா நடிப்பில் ஏற்கனவே சாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

துஷ்யந்தன், சகுந்தலையின் புராண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள இந்த படத்தில் சமந்தா சகுந்தலை வேடத்தில் நடித்து இருக்கிறார். இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். தனது புகைப்படங்களையும் வெளியிடுகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு சமந்தா நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார். இவ்வளவு காலம் ரசிகர்கள் என்மீது செலுத்தி வரும் அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!