ரூ. 1000 கோடி படத்தில் நடிப்பதை விட மக்களுக்கு உதவுவதே அதிக திருப்தி அளிக்கிறது – நடிகர் சோனு சூட்

இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சோனு சூட். கொரோனா காலத்தில் நிவாரண பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்பட பல்வேறு உதவிகளை சோனு சூட் வழங்கினார். இந்நிலையில், அசாம் மாநிலம் கொக்ராஜ்ஹர் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் பங்கேற்றார். நிகழ்ச்சியில் சோனு சூட் கூறியதாவது, ஆங்கிலம், சீனா, மராத்தி, கன்னடா, தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களில் நான் நடித்துள்ளேன். அந்த படங்கள் அனைத்தும் வெற்றியடைந்தன… ஆனால், கொரோனா வைரஸ் தாக்கியபோது பொதுமக்களுடன் இணைய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அ

ந்த மக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு முன் அந்த மக்களை நான் சந்தித்ததில்லை. அவர்களை நான் மீண்டும் சந்திக்கப்போவதில்லை. அந்த சமயத்தில் தான் அவர்களின் வாழ்க்கைக்கு தெரிந்தோ தெரியாமலோ மகிழ்ச்சியை கொண்டுவந்தேன். அதற்கு பதிலாக நிறைய ஆசிர்வாதம் பெற்றேன். இதன் மூலம் வெற்றி எவ்வ்வாறு இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். மக்களுக்கு உதவுவதே அதிக திருப்தி அளிக்கிறது. நான் திரைத்துறையில் கடந்த 20 ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன். நீங்கள் 500 – 1000 கோடி ரூபாய் திரைப்படத்தில் நடிக்கலாம். ஆனால், ஒரு நபரின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை அது கொண்டுவரது.’ என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!