வாலி படத்தில் அஜித் தவிர வேறு யாரு நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- எஸ்.ஜே. சூர்யா சொன்ன பதில்

தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா நடிக்க தேவா இசையமைப்பில் வெளியானது வாலி.

இந்த படத்திற்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அதிலும் அஜித் இரட்டை வேடத்தில் வில்லன் வேட கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருந்தார்.
அப்படத்திற்காக அவருக்கு பிலிம்பேர் விருது எல்லாம் கிடைத்தது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யாவிடம், அஜித் தவிர வேறு எந்த நடிகர் வாலி படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அஜித் சார் தவிர நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!