ஏ.ஆர்.ரகுமானுக்கு பரிசளித்த பார்த்திபன்.. அடுத்த பட கூட்டணியா இருக்குமோ..? ரசிகர்கள் சலசலப்பு..

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

மேலும், இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்த்திபன் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இவர் இந்தாண்டு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பியானோ வடிவில் பரிசு ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், “ஆன்மாவை அலங்கரிப்பது இசை.இசைப்புயலின் அலுவலக அலங்காரத்தில் என் பரிசும். மனதில் மகிழ்ச்சி tune ஆகிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அடுத்த பட கூட்டணியா இருக்குமோ என்றி சலசலத்து வருகின்றனர்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!