நாங்கள் திருமணம் செய்து கொள்வோமா? என்பது தெரியாது? விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் நடிகர் விஷணு விஷால். இவர், தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்தாண்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், விஷ்ணு விஷால், தனியாகவே வசித்து வந்தார். சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில், அமலா பாலுடன் இணைந்து ராட்சசன் படத்தில் நடித்தைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டார். அது முட்டாள்தனமான செய்தி. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். நாங்களும் மனிதர்கள் தான். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Guttajwala/status/1144249426707386368

தற்போது பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதை வைத்து இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இதனால் தான் மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஜூவாலா கட்டாவை பிடிக்கும். ஒரு வருடமாக அவருக்கும் என்னை பிடிக்கும். இருவரும் நண்பர்களாக சேர்ந்து வெளியில் சுற்றி வருவோம். நேரத்தையும் ஒன்றாக செலவிடுவோம். எங்களது நட்பை அடுத்த கட்டத்திற்கு அதான் திருமணத்தை நோக்கி செல்வோமா? என்பதை இப்போது சொல்ல இயலாது. இப்போது எங்களது வேலைகளில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் சொன்னது போல் இருவரும் ஒன்றாகத்தான் நேரத்தை செலவிடுகிறோம் என்பதற்கிணங்க சில்லென்றிருக்கும் சென்னையில் என்ற பதிவோடு விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை ஜூவாலா கட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தப் புகைப்படத்தைக் கொண்டு இருவரும் லிவிங் டுகெதர்னு இருப்பீங்களா?இல்லை கல்யாண சாப்பாடு போடுவீங்களா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.