சாலையோர மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன் -விக்கி..

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்த ‘கனெக்ட்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.

இதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் தனது இரட்டை குழந்தைகளுடன் இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!