மகன் கையில் காயம்.. அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை நேற்று தனது பேரன்களோடு கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாளின் போது ரஜினியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன் குவித்திருந்தனர். அதிகாலை முதலே திரண்ட ரசிகர்கள் ரஜினி வீட்டின் வெளியே வந்து கையசைப்பார் என்று காத்திருந்த நிலையில் வீட்டிலிருந்து லதா ரஜினிகாந்த் வந்து சார் ஊரில் இல்லை. அதனால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால் அவர் நேற்று முழுவதும் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி தனுஷ்-ஐஷ்வர்யாவின் மகன்களான லிங்கா, யாத்ராவுடன் பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷின் மகன் லிங்கா கையில் காயம் ஏற்பட்டு கட்டு போட்டப்பட்டிருந்தது. இதனால் தனுஷின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகச் கூறப்ப்படுகிறது.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!