வெங்கட் பிரபுவிடம் இப்படி ஒரு திறமையா? வியந்து போன ரசிகர்கள்..

பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு ‘சென்னை -28’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான, மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மதலீலை போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது இவர் நாகசைதன்யா நடிப்பில் என்சி22 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா “என்சி22 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தீபாவளி ஸ்பெஷல்.. மறைந்திருக்கும் திறமை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!