நடிக்க வரலைனா இந்த தொழில் தான் செய்திருப்பேன்: நிதி அகர்வால் by priya | @ | September 24, 2022 3:48 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகை நிதி அகர்வால் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவி ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்தவர். அதற்கு பிறகு அவர் தெலுங்கு, தமிழில் தற்போது சில படங்கள் வைத்து இருக்கிறார்.தற்போது சென்னையில் இருக்கும் அவர் நேரலையில் ரசிகர்கள் உடன் உரையாடினார். தான் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும், மேலும் தான் யோகாவில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறி இருக்கிறார்.நடிகை ஆகவில்லை என்றால்..அப்போது அவரிடம் ‘நீங்க நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீங்க’ என கேட்டார். அதற்க்கு பதில் சொன்ன அவர் “நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள். சம்பாதிக்க எதாவது வேலைக்கு போ என்று தான் சொல்லி இருப்பார்கள்.” “நான் நடிகை ஆகவில்லை என்றால் பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன். பேஷன் டிசைனிங் படித்துவிட்டு அதை செய்திருப்பேன். என் குடும்பம் பிஸ்னஸ் பின்னணி கொண்டது. அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தி இருப்பேன்” என நிதி அகர்வால் கூறி இருக்கிறார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…