பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இத்தனை பிரபலங்கள் மிஸ் செய்தார்களா?

பிரம்மாண்டத்தின் உச்சமாக தமிழ் சினிமாவில் தயாராகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய நாவலை தழுதி உருவாகும் இப்படத்தை மணிரத்னம் அவர்கள் இரண்டு பாகங்களாக இயக்குகிறார்.

முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் பட போஸ்டர்கள், டீஸர் எல்லாம் வெளியானது. ரசிகர்கள் டீஸரை பார்த்ததும் தான் பிரம்மிப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

தினமும் அப்படத்தை பற்றி ரசிகர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மிஸ் செய்த பிரபலங்கள்
இந்த படத்தில் நடிக்க படக்குழு நிறைய பிரபலங்களை அணுகியுள்ளார்கள். இதில் சிலர் ஒப்புக்கொண்டு நடிக்க மற்றவர்கள் வேறு படங்களில் கமிட்டான காரணத்தால் இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளார்கள்.

அப்படி யார் யார் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

மகேஷ் பாபு, சூர்யா, விஷால், அனுஷ்கா, ஆர்யா, சத்யராஜ், பிரியங்கா சோப்ரா, அசின் என இவர்களை படத்தில் நடிக்க வைக்க படக்குழு அணுகியிருக்கிறார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!