ஓடிடி இப்ப கொடுப்பான் பிறகு அவனே ஃபிக்ஸ் பண்ணுவான் – நடிகர் ராதாரவி

த நைட்டிங்கேல் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இந்த படத்தில் ஸ்ரீதர் மாஸ்டர், காவ்யா பெல்லு, ஸ்வாதி கிருஷ்ணன், ஜான் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தென்மா மற்றும் சதிஷ் சக்ரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராதாரவி பேசியதாவது, ” ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி மேலே இருந்து வந்தவர். எல்லாரும் ஓடிடின்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன்.

இப்பம் கொடுப்பான் ஓடிடி பிறகு அவனே ஃபிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும். கமல் எல்லாம் எவ்வளவு திறமை பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்‌ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்” என்றார்

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!