மீண்டும் சிம்பு – த்ரிஷா படமா.. கௌதம் மேனன் சொன்ன லேட்டஸ்ட் தகவல்

சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அந்த அளவுக்கு அந்த படத்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் தற்போதும் இயக்குனர் கௌதம் மேனனிடத்தில் கேட்க்கும் கேள்வி.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் த்ரிஷா மற்றும் எஸ்டிஆரை வைத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை எடுத்தார் கௌதம் மேனன். அது விடிவி 2ன் முன்னோட்டம் என்றே ரசிகர்கள் கருதினார்கள்.

கெளதம் மேனன் பதில்
இந்த ஜோடியை மீண்டும் இணைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். அதற்கு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கௌதம் மேனன் பதில் கூறி இருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது என்றும், கண்டிப்பாக சிம்பு – த்ரிஷா படம் இணையும் படம் எடுப்பேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!