வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்

நயன்தாரா, சமந்தா , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ரூ.50 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.

சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முதலில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்று மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது படம். அவரது திட்டமே திருமணத்திற்கு முன்பே பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதுதான். விஜய் சேதுபதியை இயக்கி விட்டார். அடுத்து அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!