நானே வருவேன் திரைப்படம் செல்வராகவன் எழுதிய கதையே இல்லையாம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

முக்கிய இயக்குனர் செல்வராகவன்  
தமிழ் சினிமாவில் மிக சிறந்த படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய பெயரை பெற்றவர் தான் இயக்குனர் செல்வராகவன்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என கிளாசிக் படங்களை இயக்கி தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் செல்வராகவன்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன்.  

நானே வருவேன் படத்தின் கதை  
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே செல்வராகவன் அளித்துள்ள சமீபத்திய பெட்டியில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

அதன்படி தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணைந்து நல்ல படத்தை கொடுக்க நினைத்தோம், இதற்காக புதுப்பேட்டை 2 உள்ளிட்ட பல கதைகள் குறித்து பேசினோம், இந்த பேச்சு வார்த்தை 6 மாதங்கள் நடைபெற்றது.

பின் தனுஷே ஒரு கதையுடன் வந்தார், அவர் கூறிய கதை என்னை கவர்ந்தது, சவாலாக இருந்தது. இது தனுஷின் கதை மற்றும் திரைக்கதை நான் இயக்கியுள்ளேன் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!