புஷ்பா 2ம் பாகம் நடிகர்களுக்கு சம்பளம் இவ்வளவா! முதல் பாகத்தை விட பல மடங்கு

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் பாக்ஸ்ஆபிசில் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியில் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டியது. ஹிந்தியில் மட்டும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வந்திருக்கிறது.

2ம் பாகம்
புஷ்பா இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்க இருக்கின்றனர். முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கின்றனர்.

முதல் பாகத்தில் இருந்த அத்தனை முக்கிய நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர்.


சம்பளம் அதிகரிப்பு
முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மற்றும் இயக்குனரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மூன்று மடங்கு சம்பளமும், இயக்குனர் சுகுமாருக்கும் முதல் பாகத்தை விட 3 மடங்கு சம்பளமும் தர இருக்கின்றனர்.


ராஷ்மிகாவுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தரப்பட இருக்கிறது. மேலும் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடிய சமந்தா இரண்டாம் பாகத்திலும் இருப்பார் என தெரிகிறது. அவருக்கும் மிகப்பெரிய தொகை தரப்படும் என செய்தி வெளியாகி இருக்கிறது. ஊ அண்டவா பாட்டுக்கு மட்டும் சமந்தா 5 கோடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!