30 வருடங்களுக்கு பிறகு பாக்யராஜுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த பாக்யராஜ் உடன் 30 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை ஜோடியாக சேர்ந்துள்ளார்.


தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


1992ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய ’ராசுகுட்டி’ படத்தில், பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக இணைந்திருந்தனர். இந்நிலையில் இந்த ஜோடி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் படத்தில் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 


மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!