காதல் திருமணம்.. முதல் முறையாக கூறிய நடிகர் பிரபாஸ்

பாகுபலி பிரபாஸ்
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கி வந்த பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் ராதே ஷ்யாம் எனும் திரைப்படம் பாண் இந்தியா படமாக வெளிவந்திருந்தது.

வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை அடைந்திருக்கும் இப்படம், தற்போது வரை கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகன், நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ,திருமணம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
காதல் திருமணம்  

இதற்கு பதிலளித்த நடிகர் பிரபாஸ் ‘என் திருமணம் நிச்சயம் நடக்கும். அது காதல் திருமணமாக மட்டுமே தான் இருக்கும். ஆனால், எப்போது என்பது என் கையில் இல்லை என்று’ தெரிவித்துள்ளார்.

திருமணத்தை குறித்து இதற்குமுன் பிரபாஸ் பேசியிருந்தாலும், காதல் திருமணம் தான் நடக்கும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளது ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!