இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க முடியாது.. வெளியான அதிர்ச்சி தகவல்

சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு பகுதியில் உள்ள அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது.

ஆனால் நான் காலிசெய்யமாட்டேன் என்று கூறினார் இளையராஜா. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் ” இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க முடியாது ” என்று பிரசாத் ஸ்டூடியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஒரு நாள் மட்டும் நான் பணிபுரிந்த ஸ்டூடியோவில் தியானம் செய்யவும், தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொள்ளவும், இளையராஜா அனுமதி கேட்டிருந்த நிலையில், இப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!